இந்தியாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா – 34,159 பேருக்கு தொற்று! 607 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 607 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 34,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,25,58,530 ஆக அதிகரித்துள்ளது. வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் 60,38,46,475 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் அலட்சியம் காட்டாமல் விரைவாக செலுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
IPL 2021 அப்டேட்ஸ் – உலகின் நம்பர் 1 வீரரை களமிறக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
இந்த நிலையில் புதிதாக 607 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,36,365 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி 4, 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 34,159 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 3,17,88,440 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது வரை குணமடைந்தோர் விகிதம் 97.67 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,33,725 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.