தமிழகத்தில் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்துள்ள சாம்சங் – 400 கோடி ரூபாய் முதலீடு!
தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் புதிய 5ஜி மற்றும் 4ஜி ரேடியோ கருவிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
சாம்சங் நிறுவனம் :
சாம்சங் நிறுவனம் இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்று. இந்தியா, பங்களாதேஷ் உள்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது உற்பத்தி தளத்தை அமைத்து வருகிறது சாம்சங்.இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டில் சுமார் 400 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் புதிய 5ஜி மற்றும் 4ஜி ரேடியோ கருவிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்த மத்திய அரசு (பி.எல்.ஐ) திட்டத்தை தொடங்கியுள்ளது இதன் மூலம் டெலிகாம் கருவிகள் மற்றும் உபகரணங்கள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சாம்சங் இணைந்துள்ளது. அந்நிறுவனம் காஞ்சிபுரத்தில் 400 கோடி ரூபாயில் தொழிற்சாலை அமைப்பது மூலம் மத்திய அரசின் 12,195 கோடி ரூபாய் மதிப்பிலான டெலிகாம் கருவிகளுக்கான (பி.எல்.ஐ) திட்டத்தில் இணைந்துள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு – ஆன்லைன் மூலம் எளிதாக செய்யலாம்.. வழிகள் இதோ!
Exams Daily Mobile App Download
இது குறித்த சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் வருகையின் மூலம் இந்தியாவில் 5ஜி சேவை விரிவாக்கப்படும் .மேலும் சாம்சங் நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து 5ஜி கருவிகளுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.