பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு சமந்தா விடுத்த வேண்டுகோள் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
நடிகை சமந்தா விவகாரத்திற்கு பின் வழக்கம் போல தனது வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக பதிவு ஒன்றை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சமந்தா:
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நாட்டம் கொண்ட சமந்தா ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தமிழ் படத்தில் நடிக்க தொடங்கினார். அதன் பின் தெலுங்கு சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினர். மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்து டாப் ஹீரோக்களுடன் நடிக்கத் தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இணைந்து நடித்த த ஏ மாய சேசாவே படம் வெற்றியை கண்டது.
கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானசா, ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகல்? ரசிகர்கள் ஷாக்!
அப்படத்தில் இருந்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் நண்பர்களாக பழகத் தொடங்கினர். அதனை தொடர்ந்து இருவருக்கும் மத்தியில் காதல் தொடங்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டு சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின், திரைப்படங்களில் சமந்தா நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல் தொடர்ந்து வெளியாகி வந்தது. இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல் இருவரும் அமைத்து காத்து வந்தனர். திடீரென இருவரும் திருமண பந்தத்தில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர்.
விரைவில் திருமணத்துக்கு தயாராகும் மதன் & ரேஷ்மா ஜோடி – வைரலாகும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!
அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையிலும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்று வந்தார். தற்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் மகள் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை பற்றி கவலை கொள்ளாமல் உங்கள் மக்களை வலிமையானவராக தயார் செய்யுங்கள். திருமணத்திற்கு பணம் சேர்த்து வைப்பதற்கு பதிலாக அவர்களின் கல்விக்கு செலவிடுங்கள். தன்னை தானே நேசிக்கவும், தன்னபிக்கையை வளர்க்கவும் கற்றுக்கொள்ளுங்கள் என்று பெண்ணை பெற்றவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.