விவாகரத்திற்கு பின் மீண்டும் சந்தித்து கொண்ட சமந்தா & நாக சைதன்யா – இதுதான் விஷயமா?
கடந்த அக்டோபர் மாதத்தில் தங்களது விவாகரத்து விஷயத்தை அறிவித்த நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடி விவகாரத்திற்கு பின்பாக தற்போது மீண்டுமாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தற்போது ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
நடிகை சமந்தா
தென் இந்திய திரையுலகில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக பார்க்கப்பட்ட நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்று கொண்டனர். சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வந்த கால கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடி மீண்டுமாக சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியது. இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை தற்போது வெறும் 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துள்ளது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய வருண் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் ஷாக்!
அந்த வகையில் சமீபத்தில் தங்களது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நாக சைதன்யா, சமந்தா ஜோடி அதற்கான சரியான காரணத்தை கொடுக்கவில்லை. இருந்தாலும் இந்த விவாகரத்திற்கு குழந்தை பிரச்சனை தான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகர் நாக சைதன்யா, சமந்தா நடிக்கும் திரைப்படங்கள் தங்களது குடும்ப பெருமையை கெடுப்பதாக இருந்ததாகவும், இது குறித்து சமந்தாவிடம் பல முறை பேசியும் அவர் இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & விஜே தீபிகா சேர்ந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் பாராட்டு!
இந்த கருத்து குறித்து நடிகை சமந்தா எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை. இப்படி இருக்க விவாகரத்திற்கு பின்பாக ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய சமந்தா இங்கிருந்தபடியே படப்பிடிப்புகளில் கலந்து வருகிறார். இந்நிலையில் திடீரென நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் சந்தித்து கொண்டதாக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, ராம நாயுடு ஸ்டுடியோவில் நடைபெற வெவ்வேறு விதமான படப்பிடிப்பில் நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இருவரும் ஒரே இடத்தில் இருந்தாலும் அவர்கள் தங்களது படப்பிடிப்பை முடித்து கொண்டு பேசிக்கொள்ளாமலேயே அங்கிருந்து சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.