தனியார் பள்ளி அலுவலர்களுக்கு உடனே ஊதியம் வழங்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் / சுயநிதி / மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ மற்றும் பிறவாரிய பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிடவும் அதன் விவரத்தினை பெற்று தொகுத்து அனுப்பிட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கநர் / தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் / தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியத்தினை எவ்வித காலதாமதமும் இன்றி உடன் வழங்கிவிட்டு அதன் விவரத்தினை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்பிடவும் அனைத்து வகை தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்த அரசாணை வெளியாகியுள்ளது. எனவே ஆசிரியர்கள் தங்களின் ஊதியத்தினை பெற்று கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |