இந்தியாவில் மாத சம்பளம் வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த பட்ஜெட் – முழு விபரம் இதோ!
மத்திய அரசின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தபடாது என குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த தகவல் மாத ஊதியம் பெறுவோர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முழு விபரம்:
மத்திய அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்தார். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த வகையில் இன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் மாத ஊதியம் பெறும் ஊழியர்கள் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை, எனவே முன்னதாக வருமான வரி வரம்பு உயர்த்தப்படாமல் இருப்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆண்டில் 12 மாத ஊதியத்திற்கு பதிலாக 11 மாத ஊதியம் மட்டுமே பெற்று வருகிறார்கள்.
அரசு ஊழியர்களுக்கு பிப்.1 முதல் சம்பள உயர்வு அமல் – முதல்வர் அறிவிப்பு!
இந்த கொரோனா தொற்று காலத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நிதியமைச்சரின் அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் டிஜிட்டல் கல்வி ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றதாக இருந்தாலும் நாட்டில் உள்ள பல பள்ளிகளில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிப்பறை, மின்சாரம் மற்றும் கட்டிட வசதிகளை முதலில் செய்து தர வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – யூனியன் பட்ஜெட்டின் அம்சங்கள்!
மேலும் கடந்த சில ஆண்டுகளில் பட்ஜெட் அறிவிப்புகளோடு ஒப்பிடும் பொழுது வெற்று அறிவிப்புகளாக உள்ளன. மேலும் நாட்டில் நேர்மையாக வரி செலுத்தும் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன் கருதி தனிநபர் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்த மத்திய அரசு முன் வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.