அரசு ஊழியர்களுக்கு பிப்.1 முதல் சம்பள உயர்வு அமல் – முதல்வர் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு பிப்.1 முதல் சம்பள உயர்வு அமல் - முதல்வர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு பிப்.1 முதல் சம்பள உயர்வு அமல் - முதல்வர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு பிப்.1 முதல் சம்பள உயர்வு அமல் – முதல்வர் அறிவிப்பு!

புதிய ஊதிய திருத்தக் குழு (பிஆர்சி) பரிந்துரைகளின்படி பிப்ரவரி 1 முதல் சம்பளம் வரவு வைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

ஊதிய உயர்வு:

ஆந்திர மாநிலத்தின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் போட்சா சத்தியநாராயணா, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார். புதிய ஊதிய திருத்தக் குழு (பிஆர்சி) பரிந்துரைகளின்படி பிப்ரவரி 1 முதல் சம்பளம் வரவு வைக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம், 11வது ஊதிய திருத்தக் குழுவின் (பிஆர்சி) படி, அரசு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தை அமல்படுத்த, மாநில அரசு உத்தரவிட்டது.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – யூனியன் பட்ஜெட்டின் அம்சங்கள்!

ஆனால், புதிய பிஆர்சி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஊதிய விகிதத்தையே தொடர வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுப் பணியாளர் கவுன்சிலில் தாங்கள் ஏற்றுக்கொண்டதுக்கும் அரசு அறிவித்ததற்கும் வித்தியாசமானது என்றும் ஊழியர் சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) குற்றம் சாட்டியது. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சம்பளம் குறையும் என்ற அச்சத்தில் உள்ளனர். ஊதிய திருத்தம் தொடர்பாக ஊழியர்களின் போராட்டத்திற்கு மத்தியில், ஆந்திரப் பிரதேச அரசு, விஜயவாடாவைச் சுற்றியுள்ள பல்வேறு துறைத் தலைவர்களின் (HoD) அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) ஒரு சிறிய பகுதியை சரி செய்ய புதிய உத்தரவை வெளியிட்டது.

பிப்ரவரி 5ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!

அதேசமயம், ஜனவரி 2022க்கான சம்பள பில்களைத் தயாரிப்பதில் அதன் அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறிய கருவூலத் துறையின் தவறு செய்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. சிறப்பு தலைமைச் செயலாளர் (நிதி) ஷம்ஷேர் சிங் ராவத் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், அமராவதி தலைநகர் பிராந்தியத்தில் விஜயவாடாவைச் சுற்றி அமைந்துள்ள HoD அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி 17 ஆம் தேதி உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட 8% க்கு எதிராக 16% HRA வழங்கப்படும். இது மாநில செயலக ஊழியர்கள் மற்றும் விஜயவாடாவில் உள்ள மற்ற HoD ஊழியர்களுக்கு வழங்கப்படும் HRA க்கு இணையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!