தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு செப். சம்பளம் – புதிய சிக்கல்!
தமிழக அரசு ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சம்பளம் வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பள பட்டியலை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சம்பளம் பெற சிக்கல்:
தற்போது தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் ஊதியத்தை ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றனர். மாவட்ட அளவில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், அலுவலக ஊழியர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் பட்டியல் தயாரித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் கருவூலத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து மின்னணு பரிவர்த்தனையில் சம்பளங்கள் போடப்பட்டு வருகிறது.
பெண் போலீசாருக்கு தினசரி 8 மணிநேரம் மட்டுமே வேலை – சூப்பர் அறிவிப்பு!
இந்த மாத சம்பளத்தை பெறுவதற்காக செப்., 20 ல் சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டது. சம்பள பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர், ஊழியர் சம்பள பட்டியல் விவரங்கள் ஏற்றும் போது பட்டியலை ஏற்க மறுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆசிரியர், ஊழியர்கள் கருவூலக அதிகாரிகளிடம் சம்பள பட்டியல் விபரங்களை பதிவேற்ற முடியவில்லை என கருவூலக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் – ரூ.1,000 கீழ் உள்ள பிளான்கள்!
கொரோனா காலம் என்பதால் பெரும்பாலோனோருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர், ஊழியர் சம்பள பதிவேற்றத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது அனைவரையும் பீதியடைய செய்துள்ளது. தற்போது சம்பள பில் வழங்க 4 நாட்களே உள்ள நிலையில் பட்டியல் வழங்காமல் செப்.,க்கான சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களின் புகாரின் பேரில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.