பெண் போலீசாருக்கு தினசரி 8 மணிநேரம் மட்டுமே வேலை – சூப்பர் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் காவலர்கள் பணி நேரம் 12 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெண் காவலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பணி நேரம் குறைப்பு:
நாடு முழுவதும் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல்துறை இன்றி அமையாத பல சேவைகளை செய்து வருகின்றது. ஆனால் அவர்களுக்கான போதிய விடுப்புகள் மற்றும் வேலை நேரம் முதலியன வரையறுக்கப்படாமல் உள்ளது. இதனால் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாகியுள்ளது. இதில் பெண் காவலர்கள் அதிகமாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பனி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் தினசரி 2 ஜிபி டேட்டா திட்டம் – ரூ.1,000 கீழ் உள்ள பிளான்கள்!
மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களின் பணி நேரத்தை குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 12 மணிநேரம் இருந்த பெண் காவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே கூறியுள்ளார். இதன் மூலம் பெண் காவலர்களுக்கான பணி சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டு பணிகள் மட்டுமல்லாது வீட்டு பணிகளும் இருப்பதால் இவ்வாறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
அக்.4ம் தேதி 5 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக மாற்றப்பட்ட பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே கூறியுள்ளார். இந்த உத்தரவு பெண் காவலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே சில இடங்களில் இந்த முறை அமலில் இருந்தாலும், மாநிலம் முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.