மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, சம்பள உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்பட்டு 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதையடுத்து மீண்டும் அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான தகவல்களை விரிவாக பார்ப்போம்.
அகவிலைப்படி உயர்வு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 28% அகவிலைப்படியை பெற்றனர். இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த ஜூலை மாதம் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து 31% அகவிலைப்படி பெற்று வந்தனர். இதையடுத்து இந்த ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன்படி தற்போது 34% அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வருகின்றனர். இதையடுத்து தற்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் ஊழியர்கள் விலைவாசியை எதிர்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அதன்படி வருகிற ஜூலை மாதத்தில் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக ஃபிட்மெண்ட் காரணி உயர்த்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அரசு ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு – சுற்றறிக்கை வெளியீடு!
நாட்டில் உள்ள பணவீக்கத்தை அடிப்படையாக வைத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படும். அதன்படி இந்த முறை அகவிலைப்படி 4% வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தற்போது ஃபிட்மெண்ட் காரணி 2.57 என்ற அளவில் உள்ளதை 3.68 என்ற அளவுக்கு உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஃபிட்மெண்ட் காரணி உயரும் போது ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் உயரும். அதன்படி ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18000 லிருந்து ரூ.26000 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.