வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – விரைந்து முடிவெடுக்க அரசு உத்தரவு!
இந்தியாவில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி, ஊதிய உயர்வு, 8 – வது ஊதிய குழு அமல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த வேளையில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை எழ தொடங்கியுள்ளது. இறுதியாக கடந்த 2020ம் ஆண்டு வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2022 நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் 12 – வது ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சு வார்த்தையை விரைந்து தொடங்கி டிச. 01ம் தேதிக்குள் முடிக்க மத்திய நிதியமைச்சகம் இந்திய வங்கிகள் கூட்டமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் கோதுமை, பருப்பு வழங்குவதில் சிக்கல் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
தற்போது ஊதிய ஒப்பந்த காலம் முடிவடைந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இதுவரை ஊதியம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் பலரும் பங்கேற்பதால் முடிவை எடுப்பதில் காலதாமதம் ஆகிறது. அதனால் அடுத்த முறை ஊதிய ஒப்பந்த காலம் முடிவடைவதற்குள் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.