ரேஷன் கடைகளில் கோதுமை, பருப்பு வழங்குவதில் சிக்கல் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கோதுமை மற்றும் பருப்பு கொள்முதல் குறைந்துள்ள நிலையில் ஒன்றிய அரசு மாதம் 10,000 டன் கோதுமை, பருப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ரேஷன் கடை:
இந்தியாவில் பருவமழை மற்றும் உள்நாட்டின் இறக்குமதி குறைவு ஆகிய காரணத்தினால் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் கொள்முதல் மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளை ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை – கவனமா இருங்க மக்களே! வானிலை எச்சரிக்கை!
இந்நிலையில், மாதந்தோறும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா 1000 டன் கோதுமை மற்றும் துவரம் பருப்புகளை மத்திய அரசு ஒதுக்கி வைக்க வேண்டும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன் வாயிலாக மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் 10,000 டன் கோதுமை மற்றும் துவரம் பருப்புகள் ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.