தமிழகத்தில் துணைத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் துணைத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் துணைத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் துணைத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற துணைத்தேர்வில் பல மாணவர்கள் கலந்துகொள்ளாத நிலையில் பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

துணைத்தேர்வு:

தமிழகத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் இந்த ஆண்டு 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளாத நிலையில் மாணவர்களின் நலன் கருதி விரைவிலேயே ஜூன் 19 முதல் ஜூன் 26ம் தேதி வரை மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. மேலும், பொது தேர்வு எழுதாத மாணவர்கள் கட்டாயமாக துணை தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் தேர்வு எழுதாத மாணவர்களை நேரில் அழைத்து ஆலோசனை வழங்கினர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனாலும், ஜூன் மாதம் நடைபெற்ற துணைத் தேர்வில் எக்கச்சக்கமான மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என அதிர்ச்சி கலந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை மாணவர்களின் வாழ்க்கை பாதிப்படைய கூடாது என்பதற்காக வரும் ஜூலை 14 ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு மேலாண்மை குழு கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – விரைந்து முடிவெடுக்க அரசு உத்தரவு!

இந்தக் கூட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மற்றும் துணைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர்களிடம் மாணவர்கள் விரும்பும் படிப்புக்குறித்து கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!