TCS நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் அறிவிப்பு!
பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது என தகவல் வெளியான நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனம் அதற்கு தகுந்த விளக்கம் அளித்துள்ளது. இது குறித்தான முழு அறிவிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை தனது ஊழியர்களுக்கு பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு ஆண்டு மட்டுமே நிறைவு செய்த பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனை அடுத்து ஊழியர்கள் அனைவரும் சம்பள உயர்வு கிடைக்காதா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
அதாவது ஏப்ரல் 1ம் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவு செய்த பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது என தகவல் பரவியது. இதனை அடுத்து டாடா கன்சல்டன்சி நிறுவனம் தற்போது தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் சம்பள உயர்வு கொள்கையில் தற்போது வரைக்கும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், அனைத்து அனுபவம் பெற்ற ஊழியர்களுக்கும் ஆண்டு சம்பளம் அப்ரைசல் உண்டு எனவும் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று 189 ரயில்கள் ரத்து? முழு பட்டியல் இதோ!
மேலும், கொரோனா காலகட்டத்தில் கூட ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பள உயர்வு, பணி உயர்வு வழங்கப்பட்டு வந்ததாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு ஆண்டு அப்ரைசலின் பகுதியாக அனைத்து அனுபவம் பெற்ற ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு கிடைக்கும் என டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதே நேரத்தில் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ஐடி நிறுவனங்களின் வருவாய் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போனஸ் மற்றும் சம்பள உயர்வு போன்ற சலுகைகளை ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின. இது தொடர்பான எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்