தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கல் – வரவேற்பு!
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கவுரவ விரிவுரையாளர்கள்:
தமிழகத்தில் புதிய கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருவதை தொடர்ந்து பல்வேறு துறைகளில் மாற்றங்களை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. ஆணை பிறப்பித்தது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – WHO அங்கீகாரம்!
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. விரிவுரையாளர்களின் நிதி நெருக்கடியை போக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் கவுரவ விரிவுரையாளர்கள் அனுபவிக்கும் துயரம் குறித்தும், முருகானந்தம் என்ற விரிவுரையாளர் இறந்தது குறித்தும் நேற்று நான் வலியுறுத்தியிருந்தேன். அடுத்த 6 மணி நேரத்தில் ஊதியம் வழங்க அரசு ஆணையிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு PhD கட்டாயமில்லை – முக்கிய அறிவுறுத்தல்!
ஊதிய நிலுவை வழங்கப்பட்டாலும் கூட, கவுரவ விரிவுரையாளர் முருகானந்தம் மறைவால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்படவில்லை. வறுமையில் வாடும் அவரது குடும்பத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட வேண்டும்! என அவர் குறிப்பிட்டுள்ளார்.