சாகித்ய அகாடமி விருது 2021 – தமிழ் எழுத்தாளர் அம்பை தேர்வு!
தமிழின் சிறந்த பெண் படைப்பாளியான அம்பை இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவருக்கு விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது.
பெண் படைப்பாளி:
இந்தியாவில் சிறந்த இலக்கிய படைப்பாளிகளை பாராட்டும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் அவர்களால் இந்த சாகித்ய அகாடமி விருது 1954 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
ஜன.7ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – ஒமிக்கிரான் எதிரொலி!
முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் ஒப்புதலுடன் வல்லுனர் புத்தகங்களை தேர்வு செய்து ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்கு பரிந்துரைப்பார்கள். விருது பெறும் புத்தகம் அதன் மொழிக்கும் பெருமையை அளிக்கிறது. ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு வழங்கப்படும் இவ்விருதானது 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் அம்பை என்று கூறப்படும் சி எஸ் லட்சுமி அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 77 வயதாகும் அம்பை சிறந்த பெண் எழுத்தாளர் ஆவார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.19 முதல் தேர்வு!
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை இவர் எழுதியுள்ளார். இதில் இவர் எழுதிய ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெறவுள்ளார். மேலும் அகாடமி விருதுடன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது குறித்து பேசிய அவர், ‘சாகித்ய அகாடமி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.