ஜன.7ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் – ஒமிக்கிரான் எதிரொலி!
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
144 தடை உத்தரவு:
இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் அடியெடுத்து வைத்த உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் தொற்று தற்போது பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் இதுவரை கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் உத்திரபிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்கிரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் தொற்று மிகவும் வீரியம் மிக்கதாக இருப்பதாக ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.19 முதல் தேர்வு!
அதனால் மத்திய அரசு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்புகள் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு விதித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தது. மத்திய அரசின் வலியுறுத்தலின்படி டெல்லி, உத்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு!
அதனால் தற்போது மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படும் விதமாக இன்று முதல் வரும் ஜன.7ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது புத்தாண்டு பண்டிகை கொண்டாட மக்கள் கூடினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால் கேளிக்கை கூடங்கள், உணவு விடுதிகள் மற்றும் மதுபான கூடங்கள் உள்ளிட்டவைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 53 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.