தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் 5 அளவிலான நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியதில் பல மோசடிகள் நடந்திருப்பதால் மாநிலம் முழுவதும் அனைத்து கூட்டுறவு சங்கங்களில் விசாரணை நடத்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தீவிர விசாரணை:
தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் அவர்கள் பல நல்ல திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தால், தான் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றுவதாக கூறியிருந்தார். அதன்படி ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் விதமாக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கூட்டுறவு சங்கங்களில் 31.3.2021 வரை 5 பவுன் அளவுள்ள நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களுக்கு அந்த நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினசரி நேரடி வகுப்புகள் ரத்து? முதல்வரின் முடிவு என்ன!
அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நகைக்கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் விவரங்கள் அதிகாரிகள் மூலம் சேகரிக்க உத்தரவிட்டார். அந்த வகையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பொது கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வாங்கியவர்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். அந்த வகையில் ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் கோடிக் கணக்கில் 800க்கும் அதிகமான நகைக்கடன்களை பெற்று மோசடி செய்துள்ளார்.
அதனால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பல நிபந்தனையின் பேரில் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கூட்டுறவு துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது அந்த நிபந்தனைகளை கூறியுள்ளார்.
- குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை, சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர்கள் சரியான விவரங்களை அளித்த பின்னர் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- தமிழ்நாடு முழுவதிலும் 48,84,726 நகைக்கடன்களில் 13,47,033 நகைக் கடைகளுக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
- ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் பல கூட்டுறவுச் சங்கங்களில் பல நகைக் கடன்கள் மூலம் பல லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
- 2021ல் பயிர் கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது.
- தமிழக அரசு அறிவித்த 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடியை முறைகேடான வழியில் பெறுவதற்கு, கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் நகைக்கடன் பெற்று மீட்டர் வட்டி, ரன் வட்டி, தண்டல் வட்டி உள்ளிட்ட கந்துவட்டி களின் மூலம் அதிக வட்டிக்கு விட்டு அதிக மோசடி செய்துள்ளனர். இந்த வகையான மோசடி குறித்து மாநிலம் முழுவதும் விசாரணை நடந்து வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்