ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை வருகிற செப்டம்பர் 6ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவு
கேரள மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். பொதுவாக சபரி மலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் மண்டல , மகர விளக்கு பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இதை தவிர ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும் முதல் ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கப்படும். இதனை தொடர்ந்து வழக்கமாக நடைபெறும் பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!
இதனால் தற்போது கேரளாவில் கொண்டாடப்பட உள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை வருகிற 6ம் தேதி மாலை முதல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனை தொடர்ந்து 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை கோவிலின் நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெய்யபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அத்துடன் 8ம் தேதி அன்று திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
Exams Daily Mobile App Download
இந்த பூஜைகளுக்கு பிறகு கோவிலின் நடை செப்டம்பர் 10ம் தேதி அன்று இரவு 10 மணிக்கு அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் செப்டம்பர் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை திறக்கப்படும். இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்