சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் கவனத்திற்கு – டிச.31 முதல் மீண்டும் அனுமதி!

0
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் கவனத்திற்கு - டிச.31 முதல் மீண்டும் அனுமதி!
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் கவனத்திற்கு - டிச.31 முதல் மீண்டும் அனுமதி!
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் கவனத்திற்கு – டிச.31 முதல் மீண்டும் அனுமதி!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இவை முடிவடைந்த பின்னர் நடை சாத்தப்பட்டு பிறகு டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரிமலை:

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவது இரு முடி கட்டி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே பக்தர்கள் வசதிக்காக ஸ்பாட் புக்கிங் டிக்கெட் முன்பதிவு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் இணைய வழி சேவை மூலம் காணிக்கை செலுத்தும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் காணிக்கை செலுத்துவதற்கான QR code பலகை சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்பதிவு அடிப்படையில் தினசரி 50,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக தங்க அங்கி பல்லக்கு தென்காசி, செங்கோட்டை வழியாக நேற்று பம்பை கணபதி கோவில் வந்தடைந்தது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு – முக்கிய அறிவிப்பு!

பிறகு அங்கியானது தலைச்சுமையாக மலைப்பாதை வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனுக்கு தங்கி அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அடுத்ததாக 30-ந் தேதி மகரவிளக்கு பூஜைக்காக கோவில் திறக்கப்படும். 31-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!