தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

0
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதி உடைய மக்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து தெரியாமல், ரேஷன் அட்டை பெற முடியாமல் இருந்து வருபவர்களுக்கு எளிய வழிமுறையாக ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் அட்டை:

நாட்டின் மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக தான் வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இந்திய குடிமக்களாகிய அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை தகுந்த ஆவணங்களின் அடிப்படியில் வழங்கப்படுகிறது. மாநில அரசின் மானியத்திற்கு உட்பட்டு அரிசி, கோதுமை, எண்ணெய், சீனி மற்றும் மண்ணெணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதனால் நாட்டின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அனைவரும் மிகுந்த பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அரசு வாழ்வாதாரத்திற்காக நாட்டில் பல இடங்களுக்கும் சென்று வேலை பார்க்கும் மக்களின் நலனிற்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு – முக்கிய அறிவிப்பு!

ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள் நாட்டின் எந்த மூலையில் இருக்கும் ரேஷன் கடையிலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாதாந்திர ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். ஆனால் திருமணம் முடிந்த தம்பதிகள் மற்றும் வேறு பல காரணங்கள் காரணமாக புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டியவர்கள் இதற்கான வழிமுறைகள் சிக்கலாக உள்ளதால் அவற்றை செய்யாமல் உள்ளனர். ஆனால் தற்போது ஆன்லைனில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் எவ்வாறு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2030ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் https://www.tnpds.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், ஸ்மார்ட் கார்டு என்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது வரும் விண்ணப்ப பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள தேவையான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பின்னர், கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை சேர்த்து பதிவேற்ற வேண்டும்.
  • இப்பொழுது, குடும்பத்தில் உள்ள நபர்களின் விவரங்களும், சிலிண்டர் இணைப்பு போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • இதனை சமர்ப்பித்து, கிளிக் செய்தால் உங்களுக்கு என்று தனியாக ஒரு விண்ணப்ப எண் கொடுக்கப்படும். அதன் மூலம் உங்களின் விண்ணப்ப நிலையை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம்.
  • பின்னர், உங்கள் முகவரிக்கு நேரடியாக புதிய ரேஷன் அட்டை வந்து விடும்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!