சபரிமலை செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அம்மாவட்ட நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
யாத்திரை அனுமதி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் பாம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மழைப்பொழிவு குறைந்து வருவதால் மண்டல மகரவிளக்கு பூஜை காரணமாக கோயில் நவ.15 ம் தேதி நடை திறக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு – தற்காலிக பட்டியல் வெளியீடு!
அவ்வாறு நடை திறக்கப்பட்ட பிறகு நவ.16 ம் தேதி மட்டும் 20 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முன்பதிவு செய்து அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மீண்டும் கேரளாவில் பத்தனம்திட்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கனமழை பெய்த காரணத்தால் மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 89 காலிப்பணியிடங்கள் – முழு விவரம் இதோ!
அதனால் சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறையின் அறிவிப்பால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள பாம்பை நதி மற்றும் அருகில் உள்ள அணைகளில் நீர்வரத்து மற்றும் நீரோட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கண்காணிக்கப்படும் போது நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டால் மீண்டும் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.