சென்னை மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு – தற்காலிக பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு பெற தகுதியுடைய பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களின் தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரசு ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசிரியர்களுக்கு இது போன்ற கலந்தாய்வு ஏதும் நடத்தப்படவில்லை.
நீட் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி தகவல்!
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான கலந்தாய்வுகள் நடத்த தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் உயர்நிலை பள்ளிகளில் கடந்த ஜன.1 ம் தேதி முதல் 2021 – 22 ம் கல்வி ஆண்டில் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகள் ஏற்படவுள்ளன. அத்தகைய பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூகுள் நிறுவன வளாகத்தில் 100 ரோபோக்கள் பணிக்காக அறிமுகம் – அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!
இந்த தலைமையாசிரியர் பதவியானது தகுந்த மூத்த பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றி பதவி உயர்வு மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் இந்த பதவிக்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கு தகுதியான மூத்த பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்களுக்கான தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது.