உக்ரைன் அரசு கட்டிடத்தில் ஏற்றப்பட்ட ரஷ்ய தேசிய கொடி – நிலையை தீவிரமாக்கும் குண்டு மழை!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடந்து வரும் போர் பதற்றங்கள் தற்போது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ள நிலையில், ரஷ்யாவின் அத்துமீறல் உக்ரைனில் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது.
குண்டு மழை:
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்கும் நோக்கத்தில் தான் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகின்றது. அண்டை நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை தான் இது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது யாராவது தலையிட்டால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையில் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் அறிக்கை!!!
ஆனால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டு நாடுகளும் வெளிப்படையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும், உக்ரைனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் இருந்தும் தாக்குதல் தொடந்து நடந்து வருகிறது. அங்கு குண்டுகள் மழையாக பொழிந்து வருகின்றது.
TNSPC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – மார்ச் 2 முதல் பயிற்சி வகுப்புகள்!
உக்ரைனின் பல பகுதிகளையும் ரஷ்யா சுற்றி வளைத்து முன்னேறி வருகிறது. பல பகுதிகள் ரஷ்யா கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் ரஷ்ய சீர்குலைவு கும்பல்கள் புகுந்துவிட்டன என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்ய சீர்குலைவு குழுக்கள் குறித்து உக்ரைன் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டடத்தில் ரஷ்ய தேசிய கொடியை ஏற்றப்பட்டுள்ளதால் அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து உள்ளது.