கிரெடிட் கார்டு & டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? விதிமுறைகள் மாற்றம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

0
கிரெடிட் கார்டு & டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? விதிமுறைகள் மாற்றம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
கிரெடிட் கார்டு & டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? விதிமுறைகள் மாற்றம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
கிரெடிட் கார்டு & டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? விதிமுறைகள் மாற்றம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களின் விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது.

விதிமுறைகளில் மாற்றம்:

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தற்போது மாற்றம் செய்திருக்கிறது. மேலும், இந்த புதிய மாற்றம் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளரின் சேவைக்கு ஏற்ப வங்கிகள் சேவை வழங்குனரை தேர்வு செய்ய வேண்டும் எனவும், வங்கிகள் தங்களது விருப்பப்படி எந்த சேவை வழங்குனரிடமிருந்தும் கார்டை பெற்று வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடாது எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் சட்டென்று உயர்ந்த தங்கத்தின் விலை – சவரன் ரூ.42,360க்கு விற்பனை!

இது போல, வங்கிகள் கார்டு வழங்கினரிடமிருந்து கார்டை பெற்று வாடிக்கையாளருக்கு வழங்கினால் வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் சேவை வழங்குனரின் பெயரை தாங்களே முடிவு செய்யலாம். அதே போல, பழைய வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டினை புதுப்பிக்க நினைத்தால் சேவை வழங்குனரை தேர்ந்தெடுக்கும் விருப்பமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் நெட்வொர்க்கை தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!