தமிழகத்தில் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு – மாணவர்களுக்கு குட் நியூஸ்!
தமிழக அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுள்ள மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாட புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் உள்ள ஆரம்ப நிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்களை அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கூடுதல் ஓய்வூதியம் பிடித்தம் – அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள புவனேஸ்வரி பேட்டை தனியார் பள்ளியில் சேர்க்கை பெற்ற சுவேந்தன் என்ற மாணவருக்கான பாட புத்தகங்கள் மற்றும் சீருடை பள்ளியின் சார்பாக வழங்கப்படாமல் உள்ளதாக அவர் தந்தை சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாணவருக்கான சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை பள்ளி கல்வித்துறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த விசாரணையில் பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள், சீருடை போன்றவற்றை அரசு ஏற்கும் என்றும், தனியார் பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் மற்றும் சீருடை போன்றவற்றை அரசு ஏற்கும் பட்சத்தில் அதிக அளவு நிதிச் சுமை ஏற்பட்டு கருவூலகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் முடிவில் இந்த மேல்முறையீட்டு மனுவை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.