தமிழகத்தில் 3000க்கும் மேற்பட்ட மருத்துவ காலியிட நியமன இறுதி பணிகள் – அமைச்சர் உறுதி!!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ காலி பணியிட நியமனம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள அனைத்து வித காலி பணியிடங்களையும் முறையான நியமன முறைகளின் படி நிரப்பி வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று ரூபாய் 50 லட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு – மாணவர்களுக்கு குட் நியூஸ்!
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தற்போது வரை தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு கோடி அறுபதாயிரம் மக்கள் பயனடைந்துள்ளதாக கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும், மருத்துவ தேர்வாணையம் மூலம் 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுநர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமன பணிகள் இறுதி கட்டத்தை அடைந்து வருவதாகவும், இதற்கான ஆணைகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 14 மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு சுமுகமாக முடிவெடுக்கப்பட்டு முதல்வரின் ஆணையின்படி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.