தமிழக தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை துவக்கம்!
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2021-2022-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் சேர்க்கை :
தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி சட்டம் மத்திய அரசால் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதற்கான செலவை அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி இல்லை – 11 மாவட்டங்களில் மட்டும்!
அதன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை வரை நடைபெறவுள்ளது. rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
மேலும் மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். எல்.கே.ஜி சேர்க்கைக்கு 31.07.2021 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் மற்றும் பிறப்புச் சான்று, மருத்துவமனை, அங்கன்வாடி பதிவேடு நகல் பெற்றோர் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சாதி, வருமானச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.