தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அனுமதி இல்லை – 11 மாவட்டங்களில் மட்டும்!
தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வகை 1 ல் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை:
தமிழகத்தில் இன்று (ஜூன் 28) காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. கடந்த முறை போல் தற்போதும் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றவாறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வகை 1 ல் இடம் பெற்றிருந்த 11 மாவட்டங்களில் தளர்வுகள் ஏதும் வழங்கப்படாத நிலையில் தற்போது புதிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகள் அனைத்தும் இன்று (ஜூன் 28) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கு கொரோனா காரணமாக நீட்டிப்பு – மலேசியா அரசு!
அதன்படி வகை 1 ல் இடம்பெற்றிருக்கும் கோவை, சேலம், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகளின் திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே நேரத்தில் 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இதர 27 மாவட்டங்களில் தற்போது டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் 11 மாவட்டங்களில் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூலை 5ம் தேதி காலை 6 மணி முதல் முடிவுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.