நாடு தழுவிய ஊரடங்கு கொரோனா காரணமாக நீட்டிப்பு – மலேசியா அரசு!
உலகளவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகள் மீதான கல்வி கட்டண புகார் – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
மலேசியாவில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற திங்கள் வரை முடிவடைய உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 4000 கீழ் வந்தால் மட்டுமே ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரே நாளில் 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மலேசியாவில் இதுவரை 5 லட்சதுக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 சதவிகித பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மருந்துகள் பெரும் பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.