தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுகவினர் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தனர். இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
உதவித்தொகை:
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது முதல்வர் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தபடி இலவச பேருந்து பயண திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றினார். ஆனால் இதுவரை குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
Exams Daily Mobile App Download
இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை திட்டத்தை நடைமுறைபடுத்தாதது குறித்து கேள்விகள் எழும்பியது. இந்த நிலையில் பெண்களுக்கான 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்தும் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்த நாள் அன்று அமலுக்கு வரும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மிக முக்கியமான வாக்குறுதிகளில் குறிப்பாக பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இதனை எதிர்பார்த்து மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.