வெள்ள பாதிப்பிற்காக தமிழகத்திற்கு ரூ.8,000 கோடி நிதி – உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!

0
வெள்ள பாதிப்பிற்காக தமிழகத்திற்கு ரூ.8,000 கோடி நிதி - உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!
வெள்ள பாதிப்பிற்காக தமிழகத்திற்கு ரூ.8,000 கோடி நிதி – உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!!

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு ரூ.8,000 கோடி நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு:

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 37 லட்சம் பொதுமக்களுக்கு ரூ. 6000 நிவாரணத் தொகை தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணமாக ரூ.6000மும், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரூ.1000மும் வழங்கப்பட்டது. இதனிடையே, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை இயற்கை பேரிடராக அறிவித்து கூடுதல் நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கவில்லை. இந்நிலையில், வெள்ள பாதிப்பிற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.8,000 கோடி நிதி வழங்கும்படியும், தற்போதைக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.3000 கோடி வழங்கும்படியும் உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை, விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு வேண்டுமெனில் அரசே அதனை பார்த்துக்கொள்ளும் எனவும், நீதிமன்றம் இதில் தலையிடாது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!