அசாம் மாநில அரசு 40 லட்சம் பெண் தொழில்முனைவோருக்கு “லக்பதி பைடியோ” திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
புதிய திட்டம்
அசாம் அரசு கிராமப்புற சிறுதொழில் முனைவோராக மாறுவதற்கு உதவுவதற்காக 40 லட்சம் சுயஉதவிக் குழு (SHG) பணியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் “லக்பதி பைடியோ” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலம் 40 லட்சம் பெண்களுக்கு ₹35,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன் மூலம் பெண் தொழிலாளர்களுக்கு ஆண்டு வருமானம் ₹ 1 லட்சத்தை அடைய வைப்பதே நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டமானது சுமார். ₹ 4,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஒவ்வொரு சுய உதவிக் குழுக்களுக்கும் முதல் ஆண்டில் ₹ 10,000 மற்றும் அடுத்த ஆண்டில் ₹ 12,500 வங்கிக் கடனாக பெறுவார்கள். அது மட்டுமில்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மானியத்தை பெற பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த பயனாளிகள் மூன்று குழந்தைகளுக்கும், தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் நான்கு குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்றுக் கொள்ளக் கூடாது என்பது கட்டாயம் ஆகும்.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
கனரா வங்கியில் ரூ.44,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – டிகிரி தேர்ச்சி போதும்!