ஜெரூசலேம் புனித பயணத்திற்கு ரூ.60,000 மானியம் – தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தமிழக சிறுபான்மையினருக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளார். அத்துடன் பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டம்
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு நாளும் அந்தந்த துறை அமைச்சர்கள் மானியம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றனர். அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று காலை முதல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சட்டப்பேரவையில் பேசினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அப்போது தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு பல நலத்திட்டங்களையும் சில சிறப்பு அறிவிப்புகளையும் அறிவித்துள்ளார். திருமண உதவி தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் தமிழக அரசு கிறித்துவ வகுப்பினை சேர்ந்த அருட்சகோதரிகளுக்கு ஜெருசலம் செல்ல மானியம் வழங்கப்படும். அந்த மானியம் இனி 60 ஆயிரமாக உயர்த்தப்பட இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார். முன்னதாக, இந்த பயணத்திற்கு 37 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
செப்.11ம் தேதிக்குள் தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும் – நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரிந்து வரும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்காளுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நலவாரியம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் சார்பில் பாரம்பரிக்கப்பட்டு வரும் விடுதிகளில் தங்கி படித்து வரும் சிறுபான்மையின மாணவிகளுக்கு பண்டிகை மற்றும் சிறப்பு தினங்களில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.