கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.370 கோடி அபராதம் வசூல் – சென்னை மாநகராட்சி!
2021 மே மாதம் முதல் சென்னை மாநகரில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்களிடமிருந்து ரூ.370 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வழிமுறைகள்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13 ல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!
தற்போது தமிழகத்திலோ ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழக அரசு, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும், ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதள இணைப்பின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2021 மே மாதம் முதல் இதுநாள் வரையிலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.370 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.