தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அமல்? புதிய விளக்கம்!

0
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அமல்? புதிய விளக்கம்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அமல்? புதிய விளக்கம்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அமல்? புதிய விளக்கம்!

தமிழகத்தில் திமுகவின் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கான உரிமைத் தொகை திட்டம் நிதி நெருக்கடி நிலை சரியாகும் போது செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உரிமைத் தொகை திட்டம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 18ம் தேதி அன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் இந்த 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் செய்யப்பட்டது. இதில் பல்வேறு நலத்திட்டங்களும் இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் நாளை (மார்ச் 24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து திமுகவின் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கான உரிமைத் தொகை திட்டம் தமிழகத்தில் நிதி நிலை சரியான பிறகு விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் அரசுக்கு நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் விரைவில் நிதி நிலைமை சீராகும் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

இவர் தெரிவித்ததாவது, தற்போது திமுக வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அத்துடன் நிதி நெருக்கடி உள்ள போதிலும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது. மேலும் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக ரூ. 1,000 வழங்கும் திட்டம், அரசு ஊழியர்களுக்கு அமலில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசுத் துறைகளில் தற்காலிகப் பணியாளா்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!