மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும் – தமிழக அரசு திடீர் அறிவிப்பு!
தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தரவுகள் ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வரையிலும் குடும்ப தலைவிகளுக்கு இரண்டு மாதத்திற்கான பணம் வங்கியின் மூலமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மாதமும் 14 அல்லது 15-ம் தேதிகளில் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 1000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவ ஊழியர்களுக்கான ஊதியம் மாற்றியமைக்க முடிவு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்நிலையில், மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் தகுதி குறித்து உறுதி செய்யப்படும் எனவும், வீட்டு வருமானம், புதிதாக வாகனங்கள் வாங்குவது மற்றும் இறப்பு பதிவு உள்ளிட்ட தரவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்படாத தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது நிறுத்தம் செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குடும்பத் தலைவிகளின் அனைத்து தரவுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.