RRB NTPC தேர்வர்கள் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு!
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 35,277 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறையை அண்மையில் நடத்தியது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
RRB – NTPC :
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தனது துறையின் கீழ் காலியாகவுள்ள 35,277 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது. பின்னர் தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பும் வெளியானது. இந்த RRB – NTPC தேர்வு நிலை Stage 1, Stage 2 மற்றும் திறன் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
குறைந்தபட்சமாக 12ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். RRB – NTPC Stage -1 தேர்வு நாடு முழுவதும் கடந்த 2020 டிசம்பர் 28ம் தேதி முதல் ஜூலை 2021 வரை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட Stage – 2 தேர்வு 2022 மே மாதம் முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு திறன் தேர்வு நடத்தப்பட்டது.
IBPS PO Mains தேர்வு முடிவுகள் 2022 – இன்று வெளியீடு!
இத்தகைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணிக்கான தகுதியை பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.அதன்படி தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றோர்களுக்கான அழைப்பு கடிதம் 10.01.2023 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ரயில்வே ஆட்கள் சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் தவறாது வரும் 18ம் தேதி முதல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவேண்டும்.
Download DV Selection List : Click Here