தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜன.07) வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இம்முகாமில் கலந்து கொள்வதற்கான விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு முகாம்:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேலைவாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இளைஞர் திறன் திருவிழா மற்றும் நேரடி வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (ஜன.07) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆதார் அப்டேட் செய்ய சூப்பர் ஏற்பாடு – அனைவருக்கும் ‘ஆதார் 3.0′ சிறப்பு முகாம்’!
Follow our Instagram for more Latest Updates
இம்முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் தேர்வு செய்யப்படுபவர்ககளுக்கு தீன் தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் அழகுகலை, அலங்கார ஆடை வடிவமைப்பு, உதவி நர்ஸ், டிரைவிங், சில்லறை வணிகம், கணினி, துரித உணவு தயாரித்தல், மென்பொருள் உருவாக்குதல், மொபைல் போன் பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் தனியார் நிறுவனங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.
இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகமானது நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும் இந்த அரிய வாய்ப்பை வேலையில்லா இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.