தமிழக அரசு வேலைவாய்ப்பு – ரூ.50,000/- சம்பளம் || 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
வாகன சீராளர் (Van Cleaner) பணியிடங்களை நிரப்ப இராமநாதபுரம் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு வேலைவாய்ப்பு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இராமநாதபுரம் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தற்போது வாகன சீராளர் (Van Cleaner) பணிக்கு 2 இடங்கள் காலியாக உள்ளது.
- இந்த பணிக்கு விண்ணப்பதாரர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பெற்றவராக இருக்க வேண்டும்.
- வாகனங்களை சுத்தம் செய்யவும், பராமரிக்க தெரிந்தவரகவும் இருக்க வேண்டும். விண்ணப்பத்தார் நல்ல உடற்தகுதி பெற்று இருக்க வேண்டும்.
- SC பிரிவினர் 1.7.2021 நாள் கணக்கின்படி 18 முதல் 37 வயதிற்குட்பட்டவராக இருந்தால் போதுமானது ஆகும். BC பிரிவினர் 1.7.2021 நாள் கணக்கின்படி 18 முதல் 34 வயதிற்குட்பட்டவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர் Level 1 ன் படி, ரூ. 15,700/- முதல் ரூ. 50,000/- வரை ஊதியம் பெறுவார்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.