மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி – உற்சாகமடைந்த ரசிகர்கள்!
பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். தற்போது வினுஷா தேவிக்கு பதிலாக மீண்டும் ரோஷினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தனது அப்பாவை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்று லட்சுமி தீவிர வேட்டையில் இறங்கியுள்ளார். லட்சுமி அப்பாவை நினைத்து தவிப்பதை பார்த்து கண்ணம்மா வருந்திக் கொண்டிருக்கிறார். அப்பா பெயரை வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே குமுறிக் கொண்டிருக்கிறார்.
தனக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை தெரிந்து கொண்ட முல்லை, மீனா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
மறுபுறம், தனது அப்பாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஹேமாவும் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது அப்பாவிற்கு சமையல் அம்மாவையே திருமணம் செய்துவைத்தால் எப்படி இருக்கும் எனவும் யோசிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் லட்சுமி எதற்ச்சையாக பாரதியின் வீட்டிற்கு வருகிறார். அங்கு லட்சுமி வருவதை கவனிக்காமல் பாரதியும் கண்ணம்மாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாரதி தான் தனது அப்பா என்கிற உண்மையை அறிந்துகொண்டு லட்சுமி ஆனந்தம் அடைகிறார்.
இதற்கு பிறகாவது பாரதியும் கண்ணம்மாவும் இணைவார்களா என எதிர்பார்த்த சமயத்தில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரோஷினி படவாய்ப்பின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். இவருக்கு பதிலாக கண்ணம்மாவாக வினுஷா தேவி அறிமுகமானார். தற்போது மீண்டும் வினுஷா தேவிக்கு பதிலாக ரோஷினி சீரியலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஷினி மீண்டும் சீரியலில் இணையவுள்ள மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.