தனக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை தெரிந்து கொண்ட முல்லை, மீனா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு கதிர் ஏதோ உண்மையை மறைப்பதாக சந்தேகம் வந்துள்ளது. இன்றைய எபிசோடில் அவர் கதிருக்கு தெரியாமல் மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்துவிடுகிறார். இந்நிலையில் நாளைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை இந்த மாதம் குழந்தை வரும் என எதிர்பார்த்த நிலையில் இல்லாமல் போனதால் அதை நினைத்து மிகவும் ஏமாற்றம் அடைகிறார். அதனால் அவருக்கு கதிர் மீது சந்தேகம் வருகிறது. மெடிக்கல் ரிப்போர்ட்டை அவர் மறைத்து வைப்பதால் முல்லைக்கு கதிர் மீது சந்தேகம் வருகிறது. அதனால் என்ன செய்வது என தெரியாமல் இருக்க மீனாவிடம் அது பற்றி பேசுகிறார். மீனா கதிருக்கு தெரியாமல் அந்த ரிப்போர்ட்டை எடுத்துவிடுங்கள் என சொல்ல, முல்லையும் சரி என சொல்கிறார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!
இன்றைய எபிசோடில் முல்லை கதிர் தூங்கிய பின் அவருக்கு தெரியாமல் சாவியை எடுத்து அந்த ரிப்போர்ட்டை எடுக்கிறார். அதை வேறு இடத்தில் வைக்க கதிர் அதை பார்க்க கூடாது என பதட்டத்துடன் இருக்கிறார். கதிர் கடைக்கு சென்ற பின்னர் மீனாவிடம் அந்த ரிப்போர்ட்டை எடுத்து விட்டேன் என சொல்ல, மீனா சரி என சொல்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றன .
இந்நிலையில் அடுத்து எபிசோடுகளில் மீனாவும் முல்லையும் மருத்துவரை சந்திக்க செல்கின்றனர். அப்போது அவர் ரிப்போர்ட்டை காட்ட டாக்டர் அதை பார்த்துவிட்டு, உங்களுடைய கருக்குழாய்யில் அடைப்பு இருப்பதாக சொல்கிறார். அதனால் உங்களுக்கு குழந்தை பிறக்காது என சொல்ல, மீனாவும் முல்லையும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். முல்லைக்கு குழந்தை பிறக்காது என சொல்ல அதை கேட்டு முல்லைக்கு என்ன பேசுவது என தெரியாமல் இருக்கிறார்.