விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் – அடுத்தடுத்து அவிழும் கதை முடிச்சுகள்!
சன் டிவியின் TRP ரேட்டிங் கிங்காக திகழும் ‘ரோஜா’ சீரியலில் பல்வேறு கதை முடிச்சுகள் தொடர்ந்து அவிழ்ந்து வருவதால் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு இத்தொடர் இப்போதைக்கு முடியப்போவதில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது.
ரோஜா சீரியல்
தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களுக்கு மத்தியில் சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் ஒரு தனி கவனம் பெற்று வருகிறது. சன் டிவியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ரோஜா’ சீரியல் இன்னும் சில எபிசோடுகளை கடந்தால் 1000 எபிசோடை எட்டி விடும். இப்படி 4 ஆண்டுகளாக பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும் கதையில் எவ்வித குறைவும் இல்லாமல் வெளியாகும் ‘ரோஜா’ சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் உயிருக்கு போராடும் அஞ்சலி – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
அதுவும் இத்தொடரில் ஆக்சன் மற்றும் காதல் காட்சிகளில் கலக்கி வரும் ரோஜா மற்றும் அர்ஜுன் ஜோடிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. இதுவரை இந்த சீரியலில் ஒரு அனாதை பெண்ணாக கருதப்பட்டு வந்த ரோஜாவுக்கு அம்மா இருப்பது தெரிய வந்த நிலையில், அவரது அம்மாவோ ரோஜா பற்றிய சுய நினைவு இல்லாமல் இருந்து வருகிறார். இப்படி நகர்ந்து வரும் இந்த கதையில் தற்போது தொடர்ச்சியாக சில கதை முடிச்சுகள் அவிழ்ந்து வருகிறது.
Vijay TV Bigg Boss Promo 1 | பொம்மை டாஸ்க்கில் குழந்தைத்தனமாக மாறிய போட்டியாளர்கள் – கமல் விமர்சனம்!
அந்த வகையில் அம்மா செண்பகத்துக்கு ரோஜா தான் அவரது மகள் என்கிற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருவது போல, அவரது அப்பா டைகர் மாணிக்கத்துக்கும் மனைவி பற்றிய உண்மை தெரிய வருகிறது. இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் பட்சத்தில் ‘ரோஜா’ சீரியல் முடிவுக்கு வரலாம் என்று சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு ‘ரோஜா’ சீரியல் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என முக்கிய தகவல் ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.