“பாரதி கண்ணம்மா” சீரியலில் உயிருக்கு போராடும் அஞ்சலி – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருக்கிறது. இந்நிலையில் அடுத்து வரப்போகும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில், தற்போது பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. வெண்பா ஜெயிலில் இருக்கும் நிலையில் புதிதாக பல மாதங்களுக்கு பின்னர் மாயன் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பாரதியை கொல்ல முயற்சி செய்து கண்ணம்மா தான் அவரை காப்பாற்றுவார். அதனால் அவருக்கு கண்ணம்மா மீது பகை இருக்கிறது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் எந்த மாதிரி கதை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி, அஞ்சலிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
Vijay TV Bigg Boss Promo 1 | பொம்மை டாஸ்க்கில் குழந்தைத்தனமாக மாறிய போட்டியாளர்கள் – கமல் விமர்சனம்!
அப்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அஞ்சலி உடல்நிலை மோசமாகிறது. அஞ்சலி எடுத்துக் கொண்ட மருந்துகளை பார்க்கும் போது டாக்டர் இடத்தில் பாரதியின் பெயர் இருக்கிறது. உடனே அஞ்சலியை கொல்ல நினைத்தது பாரதி தான் என எல்லாரும் நினைக்க உண்மையில் அதனை பாரதி வழங்கவில்லை என்ற உண்மை தெரிய வருகிறது. அதில் இருப்பது வெண்பா கையெழுத்து என்ற உண்மை பாரதிக்கு தெரிகிறது. அதனால் பாரதி என்ன நடந்திருக்கும் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.
விவாகரத்திற்கு பின் நடிகை சமந்தாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் – குவியும் வாழ்த்துக்கள்!
மேலும் அஞ்சலிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் அஞ்சலி உடல்நிலை மோசமாகிறது. அதனால் அவருக்கு உயிருக்கு ஆபத்து வருமா அஞ்சலி இறந்து விடுவாரா என பல கேள்விகள் எழுந்துள்ளது, மேலும் இன்னும் வருகிற எபிசோடுகளில் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டு புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிப்பார் அதனால் அவரை சுற்றியே கதை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளியே வர இருக்கிறது.