விவாகரத்திற்கு பின் நடிகை சமந்தாவிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் – குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் நடிகை சமந்தா. அவருக்கு சமீபத்தில் விவாகரத்து நடந்ததை தொடர்ந்து தற்போது மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை சமந்தா:
தமிழ், தெலுங்கு, என இரண்டு திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு விலகிவிடும் நடிகைகளுக்கு மத்தியில், திருமணத்திற்கு பின்பும் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இன்னும் பல நல்ல படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர் சமீபத்தில் தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தார். அதன் பின் அதிலிருந்து வெளியே வர தனது தோழிகளுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலாக்கள் சென்று வந்தார்.
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியுள்ள ‘வெண்பா’ ஃபரீனா – அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள்!
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது பிரபல நடிகை டாப்சி தயாரிப்பில் உருவாக உள்ள பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் காந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சகுந்தலம்’ மற்றும் ‘காத்துவாக்குல 2 காதல்’ ஆகிய படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிகிறது.
சன் டிவி ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்? முடிவுக்கு வரும் ஷோ!
இந்நிலையில் விவாகரத்திற்கு பின் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. அதன் படி கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ள, சர்வதேச திரைப்பட விழாவில் பேசுவதற்கான சிறப்பு அழைப்பாளராக சமந்தா அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக இந்த வாய்ப்பை பெறும் நடிகை என்கிற பெருமை சமந்தாவுக்கு கிடைத்துள்ளது. இதனால் சமந்தாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.