அப்பா, அம்மாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் அர்ஜுன் – இன்றைய ‘ரோஜா’ சீரியல் எபிசோட்!

0
அப்பா, அம்மாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் அர்ஜுன் - இன்றைய 'ரோஜா' சீரியல் எபிசோட்!
அப்பா, அம்மாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் அர்ஜுன் - இன்றைய 'ரோஜா' சீரியல் எபிசோட்!
அப்பா, அம்மாவுடன் வீட்டை விட்டு வெளியேறும் அர்ஜுன் – இன்றைய ‘ரோஜா’ சீரியல் எபிசோட்!

சன் டிவி ரோஜா சீரியலில் இன்று அனு கைது போலீசார் செய்வதில் இருந்து தப்பித்து வருகிறார். அதன் பின்னர் பாட்டி அவரை வீட்டிற்கு அழைத்து வர, அனு வந்தால் நாங்கள் இருக்க மாட்டோம் என அர்ஜுன் வீட்டைவிட்டு கிளம்புகிறார்.

ரோஜா சீரியல்:

இன்று சன் டிவி ரோஜா சீரியலில் அனு உடல்நிலை சரியானதால் அவரை கைது செய்ய போலீசார் வருகின்றனர். அவரை ஜீப்பில் ஏற்றிய பின்னர், டைகர் மாணிக்கத்தின் அசிஸ்டன்ட் வந்து அனுவிற்கு ஏற்கனவே முன் ஜாமீன் வாங்கியதை கொடுக்கிறார். அதை வாங்கி பார்த்த போலீசார் அனுவை விடுவித்து அங்கிருந்து செல்கின்றனர். அதன் பின்னர் அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து அனுவின் கட்டவுட்டை கொளுத்துகின்றனர். மேலும் அனு நடித்துக் கொண்டிருப்பது தற்போது ஊருக்கே தெரிந்து விட்டது, அது தான் தனக்கு முதல் வெற்றி என கூறுகிறார் அர்ஜுன்.

சிங்கப் பெண்ணாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா – வைரல் வீடியோ!

பின்னர் அனுவை அழைத்துக் கொண்டு பாட்டி வீட்டிற்கு வருகிறார். அப்போது அர்ஜுன், ரோஜா மற்றும் மொத்த குடும்பமும் சேர்ந்து அவர்களை தடுத்து நிறுத்துகிறது. மேலும் அவர்கள் பெரிய வாக்குவாதம் செய்கின்றனர். ரோஜா வேகமாக சென்று கதவை மூடுகிறார். அதன் பின்னர் ரோஜா இந்த வீட்டில் வாழ எல்லா உரிமையும் இருக்கிறது என சொல்கிறார். ஆனால் அதற்கு பாட்டி இது என் வீடு என சொல்கிறார். பாட்டியின் சொத்து பேரனுக்கு தான், உங்களது பேரன் அர்ஜுன் தான்.

TN Job “FB  Group” Join Now

அவரது மனைவி எனக்கும் இதில் பங்கு உள்ளது என வாக்குவாதம் செய்கிறார். அனுவை உள்ளே விட முடியாது என அர்ஜுன், ரோஜா, கல்பனா மற்றும் பிரதாப் ஆகியோர் கூறுகின்றனர். ஆனால் பாட்டி இது என் வீடு, அனு இங்கே தான் இருப்பாள் என சொல்கிறார். அப்படியென்றால் நாங்கள் இந்த வீட்டை விட்டு போறோம் என கல்பனா சொல்கிறார். அதில் எனக்கு பிரச்சனை இல்லை என பாட்டி கூறுகிறார். அதனால் அர்ஜுன், ரோஜா இருவரும் அப்பா அம்மாவை கூட்டிக்கொண்டு கிளம்புகின்றனர். ஆனால் வெளியில் சென்று பிறகு ‘நாம் ஏன் போக வேண்டும்’ என ரோஜா கேட்கிறார். பின்னர் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து பஞ்சாயத்து பண்ணுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!