சன் டிவி “ரோஜா” சீரியலில் களமிறங்கிய புது வில்லி – அர்ஜுன் எடுத்த முடிவு! ப்ரோமோ ரிலீஸ்!
சன் டிவி “ரோஜா” சீரியலில் தற்போது ஏற்கனவே இருந்த வில்லி பிரச்சனையை அர்ஜுன் முடித்து வைத்த நிலையில், அடுத்ததாக நீலாம்பரி என்ற புதிய வில்லி அவதாரம் எடுத்து இருக்கிறார்.
ரோஜா சீரியல்:
ரோஜா சீரியல் சின்னத்திரையில் டாப் சீரியலின் ஒன்றாக இருந்தது. இந்த சீரியலில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பல திருப்பங்கள் வெளியாகி வருகிறது. ரோஜா தான் குடும்பத்தின் வாரிசு என சொல்லி நிரூபிக்க வேண்டும் என அர்ஜுன் போராடுகிறார். ஆனால் அணு அதை எல்லாம் தடுத்து நிறுத்த பல திட்டங்களை தீட்டுகிறார். இருந்தாலும் அர்ஜுன் அதை எல்லாம் கடந்து வர ரோஜாவிற்கு DNA டெஸ்ட் எடுக்க நினைக்கிறார். அந்த நேரம் அனு ரோஜாவை கொல்ல முடிவு செய்ய ஆள் மாறாட்டம் செய்து ரோஜாவை காப்பாற்றுகிறார்.
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸின் புதிய முல்லை இவர் தானா? உண்மை நிலவரம் இதோ! ரசிகர்கள் ஷாக்!
ரோஜா இறந்து விட்டாள் என அர்ஜுன் அனைவரையும் நம்ப வைத்து இருக்கிறார். ரோஜாவை தலைமறைவாக பண்ணை வீட்டில் இருக்க வைக்கிறாள். நான் நிஜமாகவே செத்துப்போயிருப்பேன் என்று சொன்னதைக் கூட அர்ஜூனால் தாங்க முடியவில்லை. அந்த அளவிற்கு மனைவி மீது அபரிமிதமான காதலும் பாசமும் வைத்திருக்கிறார். சாக்ஷி தலைமறைவாகி விட்டதால் அவளுடைய தொல்லை இருக்காது. அதே போல அனுவும் சிறையில் அடைபட்டுள்ளதால் இனிமேல் ரோஜா நிம்மதியாக இருக்கலாம்.
ஆனால் தற்போது ரோஜாவிற்கு புது வில்லி நீலாம்பரி வருகிறார். அவர் யார் என்றால் நீதிபதியை கொலை செய்த வழக்கில் சாட்சி சொன்ன சிறுமிகளால் தான் 20 ஆண்டு காலம் சிறையில் இருக்க காரணம் அதனால் அவர்களை பழி வாங்க இருப்பதாக சொல்கிறார். அவள் தேடிக்கொண்டிருக்கும் அந்த சிறுமிகள் அனுவும் ரோஜாவும்தான். இப்போது அவர்கள் எங்கே இருந்தாலும் தேடிப்பிடித்து பழி வாங்குவேன் என்று சொல்கிறாள். அதனால் இந்த சீரியலில் புதிய கதை தொடங்கி இருக்கிறது.
‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய தாமரையின் உருக்கமான வீடியோ – பாசம் எல்லாம் நடிப்பா!
இது குறித்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதில் அர்ஜுன் “ஒரு நாட்டின் இளவரசன் எதிரிகள் கிட்ட இருந்து தன்னோட நாட்டையும் இளவரசியையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி போராடுவான். என்னோட போராட்டமும் அப்படித்தான். புதுசு புதுசா எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எத்தனை எதிரிகள் வந்தாலும் என்னோட இளவரசி ரோஜாவைக் காப்பாற்ற நான் ரெடி” என டயலாக் பேசி இருக்கிறார்.