தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!
தமிழகத்தில் 1 – 10ம் வகுப்பு வரையில் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 25ம் வரை கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வலுவூட்டல் பயிற்சி:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வாயிலாகவும், அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகள் வாட்ஸ் ஆப் மூலம் வினாத்தாள் அனுப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2021 -2022ம் கல்வியாண்டில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.
தமிழக அரசின் மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
நடப்பு கல்வியாண்டில் அரசின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை உடனடியாக நிரப்ப கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் 1 முதல் 10ம் வரையிலான வகுப்பு ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கற்றல் அடைவுகளை மாணவர்களுக்கு எவ்வாறு அடையச் செய்வது என்பது குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சி திங்கள்கிழமை (ஜன.10) முதல் வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜன.11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வா்களுடன் இணைந்து இந்த பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்கத் திட்டமிட வேண்டும். மேலும் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் வட்டார தலைமையிடம் உயா்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் போன்றவற்றில் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு முறையாக நடைபெறுகிறதா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வா்கள் போன்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.