தமிழகத்தில் நாளை (ஜன.11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் கிளுவங்காட்டூர் சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜனவரி.11) மின் சேவைக்கு தடை விதித்து அப்பகுதி மின்செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மின்சேவை நிறுத்தம்:
தமிழகத்தின் சில இடங்களில் மின்கசிவு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாகவும் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின் வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முதல் ராஜஸ்தான் வரை – பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட மாநிலங்களின் முழு பட்டியல்!
மேலும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடையை பல்வேறு பகுதிகளில் மின் வாரியம் அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து நாளை ஜனவரி 11 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் கிளுவங்காட்டூர் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அப்பகுதி மின் செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் மின்சார சேவை நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை நிறுத்திவைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ரயில் பயணிகளுக்கு ஷாக் – டிக்கெட் விலை ரூ.10 அதிகரிப்பு! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
மின்தடை ஏற்படும் பகுதிகள்: கோவிந்தாபுரம், அமராவதி நகர், செக்போஸ்ட் , பெரும்பள்ளம்,சைனிக் பள்ளி, மானுப்பட்டி, சாயப்பட்டறை , ஆலாம்பாளையம் , தும்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூர், கரட்டுமேடு, ஜக்கம்பாளையம், எலையமுத்தூர், கிளுவங்காட்டூர், குறுவப்ப நாயகனூர், பெரிசனம் பட்டி, குட்டியகவுண்டனூர்.