விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸின் புதிய முல்லை இவர் தானா? உண்மை நிலவரம் இதோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் அபிநயா என்ற நடிகை நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இது குறித்த உண்மை தகவல் ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சமீப காலமாக முன்னணி டிவி சேனலான விஜய் டிவியில் நடிகர், நடிகைகளின் ரீபிளேஸ்மென்ட் என்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களான நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா, காற்றுக்கென்ன வேலி ஆகிய முக்கிய சீரியல்களில் நடித்து வந்த நடிகர், நடிகைகள் பலரும் சீரியலை விட்டு விலகினார்கள். அதனால் இவர்களுக்கு பதிலாக பல புதிய பிரபலங்கள் இந்த சீரியல்களில் இடம்பிடித்து வருகின்றனர்.
‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய தாமரையின் உருக்கமான வீடியோ – பாசம் எல்லாம் நடிப்பா!
இதற்கிடையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா இந்த சீரியலை விட்டு விலகுவதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்து வந்த நடிகை விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிற்பாடு, இவருக்கு பதிலாக தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த நடிகை காவ்யா, முல்லையாக அறிமுகமானார்.
தொடர்ந்து இந்த சீரியலில் சுமார் ஒரு ஆண்டாக நடித்து வரும் காவ்யா தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு விலகுவதாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில் வைத்து முல்லை காஸ்ட்யூமில் அபிநயா என்ற நடிகையின் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியானது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இனி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லையாக நடிக்க இருக்கிறார்களா என்று வலைதளங்களில் கேள்வி எழுப்ப துவங்கி உள்ளனர்.
தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா – ரசிகர்கள் வாழ்த்து!
ஆனால் இந்த வதந்தி குறித்த உண்மை நிலவரங்கள் தற்போது வெளிவந்திருக்கும் நிலையில், நடிகை அபிநயா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்திருப்பது உண்மை தான் என்றும் அவர் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. அதாவது முல்லையின் தோழி கதாபாத்திரத்தில் தான் அபிநயா நடிக்க இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடிய நடிகை அபிநயா ஏதோவொரு விஷயத்தை சொல்ல வந்து, இடையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒருவேளை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதாபாத்திரம் குறித்து தான் இவர் பேசி இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.